Friday, February 20, 2009

நீ...

ஏதோ
தெரியாமல் பேசிவிட்டேன்
உன்னிடம்!

மௌனங்களை இரசிக்கிற
எனக்கு
உன் பேச்சு
பிரமிப்பாயிருக்கிறது.

ஒரு
புருவ உயர்த்தலிலும்,
ஒரு
உதட்டுச் சுழிப்பிலும்
உன் பேச்சு
உயிர் குடிக்கிறது.

பேசுவதற்கு
ஒன்றுமில்லையென்றாலும்,
ஏதாவது பேசவேண்டும்
என்கிற என் தவிப்பை
என்னால்
தவிர்க்கமுடிவதில்லை.

நீ
என் கை தீண்டியதிலிருந்து
என்
ஆயுள்ரேகை
அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

என்னுள் நிகழும்
எல்லா
இரசமாற்றங்களுக்கும்
உன் பேச்சே
பிரதானமாயிருக்கிறது.

பூமிச் சுழற்சியோடு
சம்பந்தப்படாத
என்
வசந்தகாலச் சேகரிப்பு
உன்னோடு
பேசிய கணங்களாலேயே
நிரம்பியிருக்கிறது.

நீ ...?

No comments:

Post a Comment