Friday, February 20, 2009

தவமும், வரமும்

நான்
உறைந்து போன கண்ணீர்.

நிலவில்லா
இந்த வானம்
பிடிக்கவில்லை.
நீயில்லா
வகுப்பறை மாதிரி.

இறந்தே பிறந்த குழந்தை
என் வார்த்தை.

கலைத்து விடுவாயென்று தெரிந்தும்
மனதில்
கூடு கட்டுகிறேன்.

பூக்களின் சிலுவை
உன் கூந்தல்.

ஒவ்வொரு மாலையும்
நீ
சூரியனை விரட்டிச் செல்கிறாய்.
உன் நிழலை
இரவென்று
வழிபடுகிறேன்.

கடவுள்
என் நண்பனாய்
இருந்திருக்கலாம்.
ஏனெனில்,
உன் மனது
அவனுக்குத் தெரிந்திருக்கும்.

நான் கனி.
அழுகும் வரை
என்னைத் துளைக்கும்
வண்டு நீ.

காதலின் காதுகளில்
ஓதப்பட்ட மந்திரம்
நான்.
அது உச்சரிக்குமா?
இல்லை மறந்திருக்குமா?

No comments:

Post a Comment