பெரும்பாலனவர்க்கு
ஆரம்பமே தடுமாற்றம்...
எதை எதையொ
எழுதிவிட எண்ணி
எதிலோ முடிந்துபோயிருக்கும்.
பிறருக்காகவே
சுயம் தொலைத்த
அலங்காரங்கள்.
பாதி படித்தபின்பே
விளங்க ஆரம்பிக்கும்
பொருள்.
பொருள் புரிய
ஆரம்பித்ததும்
மூலம் தேடும் முனைப்பு
ஒவ்வொரு சொல்லும்
ஒரு இயக்கமாய்
ஒன்று சேர்ந்து அதிரும்
அந்த ப்ரம்மம்.
No comments:
Post a Comment