சொர்க்கமும்,நரகமும்
விண்ணிலும் இல்லை,
மண்ணிலும் இல்லை.
அவை
உன் விழிகளிலும்,
உன் இமைகளிலும்
இருக்கின்றன.
நான்
மௌனத்திலிருக்கும்போதும்
உன் ஞாபகங்கள்
என்னுடன்
பேசிக்கொண்டுதானிருக்கின்றன.
ஒற்றைப் பூ
பூக்கும் நந்தவனம்
உன் கூந்தல்.
சொர்க்கமும்,நரகமும்
விண்ணிலும் இல்லை,
மண்ணிலும் இல்லை.
அவை
உன் விழிகளிலும்,
உன் இமைகளிலும்
இருக்கின்றன.
நான்
மௌனத்திலிருக்கும்போதும்
உன் ஞாபகங்கள்
என்னுடன்
பேசிக்கொண்டுதானிருக்கின்றன.
ஒற்றைப் பூ
பூக்கும் நந்தவனம்
உன் கூந்தல்.
உன் கொலுசு
எனக்கான போர்ப்பறை.
உண்மையில்
கடினமான தவம்
உன் பார்வைகளுக்காக
காத்துக் கிடப்பதுதான்.
மனிதர்களை
வெறுத்தபோது
கடவுள்
என்னைப் படைத்திருக்கிறான்.
நீ
சாதுக்களோடு
போரிட வந்த தேவதை.
மூச்சுவிடும் தூரத்தில்
நீ இருந்தாலும்
நான் சுவாசிப்பதன்
காரணம்
உனக்குத்
தெரியாமலா போயிருக்கும்?
No comments:
Post a Comment