உனக்குத் தகுதியான பரிசு தர
எங்கெங்கு எல்லாம் தேடி தொலைந்திருக்கிறேன்
என்று தெரிய வாய்ப்பில்லை உனக்கு.
தங்கச் சுரங்கத்திற்கே தங்கம்
சமர்ப்பித்தல் சரியாமோ?
எந்த வண்ணங்கள் ஏந்திப் போனாலும்
இருளுக்கு ஏற்புடையதோ?
வாசத் தோட்டத்திற்கே பூக்கள்
படைத்தல் பொருந்துமோ?
சொல்ல முடியாத உன் அழகை
சுமந்து செல்ல எந்த மொழியில் எழுத்து இருக்கிறது?
உனக்குத் தகுதியாய் எதுவுமே
தோன்ற வில்லை எனக்கு.
என் இதயமும் உயிரும்
ஏற்கனவே தந்து விட்டேன்.
இப்போது அவையும் என்னிடம் இல்லை.
சூரியனாய் நீ பிரகாசிக்கையில்
தீபங்கள் கொண்டு வந்து
தேற்ற முடியாமல் அழுகின்றேன்.
என் அன்னையே!! கருவாச்சி...
இறுதியான தேடலில்
உனக்காய் ஒரு கண்ணாடி என் பரிசாய்..
எப்போது உன் முகம் தெரிந்து கொள்கிறதோ
அப்போது என்னை நினைவில் வைத்துக் கொள்.
No comments:
Post a Comment