முட்டாள்களின் மொழியை
இங்கு யார்
புரிந்து கொள்ள இயலும்?
மொழி போட்ட பாதை
வழியே தான்
காதல் நடந்து போக வேண்டுமென்றால்
அது முடமாகித் தான் போயிருக்கும்...
பார்ப்பதற்கு கண்ணென்றும்
முகர்வதற்கு மூக்கென்றும்
வைத்து விட்டால்
காட்சியின் வாசம் இங்கு
யார் காண இயலும்?
ஒன்றோடு ஒன்று
ஊடுருவி நின்ற நெறி தெரிந்து விட்டால்
நீயென்றும் நானென்றும் ஏது?
முட்டாள்களின் மொழியை
இங்கு யார்
புரிந்து கொள்ள இயலும்?
Saturday, November 26, 2016
Monday, October 17, 2016
காதலே பிரமிப்பு!!!
வானத்தையும் மலையையும் கடலையும்
கண்டு பிரமிப்பது போல்
உன்னையும் கண்டு பிரமிக்கிறேன்....
இப்படி ஒரு காதலனா என்று???
நான் உணராத
என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும்
ரசித்து விளக்கும் பொழுது பிரமிக்கிறேன்....
எத்தனை முறை உள்வாங்கினாலும்
கரையை முத்தமிட துடிக்கும் அலையைப் போல்
என்னை வந்தடைய துடிக்கும்
உன் துடிப்பை உணரும் போது பிரமிக்கிறேன்
சிவா!!!
கூட்டிக் கொண்டு போ!!!
கண்டு பிரமிப்பது போல்
உன்னையும் கண்டு பிரமிக்கிறேன்....
இப்படி ஒரு காதலனா என்று???
நான் உணராத
என்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும்
ரசித்து விளக்கும் பொழுது பிரமிக்கிறேன்....
எத்தனை முறை உள்வாங்கினாலும்
கரையை முத்தமிட துடிக்கும் அலையைப் போல்
என்னை வந்தடைய துடிக்கும்
உன் துடிப்பை உணரும் போது பிரமிக்கிறேன்
சிவா!!!
கூட்டிக் கொண்டு போ!!!
Saturday, January 16, 2016
நான் கடவுள்
உன்னைப் பார்க்க வேண்டும் என்று
தவிப்பாய் இருக்கிறது எனக்கு!!
உன் பேச்சில் வழியும் அன்பு
எனக்கு மட்டுமே தெரியும்..
எத்தனை விழிகளுக்கு நடுவில் இருந்தாலும்
உன் கண்களை
என்னால் கண்டு கொள்ள முடியும்..,
நீ நடந்து சென்ற பாதைகள் எல்லாம்
உன் வாசம்
முகர்ந்து அறிந்து கொள்வேன் உயிரே!
ஒரு பாதம் வைத்து ஒரு பாதம் தூக்கி
நீ நடந்து போகையில்
பூமியும் வானமும் பூரித்த கணங்களுக்கு
நானே சாட்சி!!!
உதடு குவித்து,
ஒன்றையொன்று நனைத்து,
விரியும் பூவாய் விழும் வார்த்தைகளில்
என்னோடு சேர்ந்து
எங்கோ சில நட்சத்திரங்கள்
விழுந்து எழுந்திருக்கும்...
உன் இடையில் கை வைத்து
என்னோடு அணைக்கும் பொழுதுகளில்
எல்லா உயிரும் என் உயிரே!!!
உன்னோடு மோகித்து
உயிரோடு கலந்த பின்னும்
நீ 'இன்னும் வேண்டும்' எனும் போது
நான்
இறைவனாய்க் களித்திருப்பேன் என் அன்பே!!!
தவிப்பாய் இருக்கிறது எனக்கு!!
உன் பேச்சில் வழியும் அன்பு
எனக்கு மட்டுமே தெரியும்..
எத்தனை விழிகளுக்கு நடுவில் இருந்தாலும்
உன் கண்களை
என்னால் கண்டு கொள்ள முடியும்..,
நீ நடந்து சென்ற பாதைகள் எல்லாம்
உன் வாசம்
முகர்ந்து அறிந்து கொள்வேன் உயிரே!
ஒரு பாதம் வைத்து ஒரு பாதம் தூக்கி
நீ நடந்து போகையில்
பூமியும் வானமும் பூரித்த கணங்களுக்கு
நானே சாட்சி!!!
உதடு குவித்து,
ஒன்றையொன்று நனைத்து,
விரியும் பூவாய் விழும் வார்த்தைகளில்
என்னோடு சேர்ந்து
எங்கோ சில நட்சத்திரங்கள்
விழுந்து எழுந்திருக்கும்...
உன் இடையில் கை வைத்து
என்னோடு அணைக்கும் பொழுதுகளில்
எல்லா உயிரும் என் உயிரே!!!
உன்னோடு மோகித்து
உயிரோடு கலந்த பின்னும்
நீ 'இன்னும் வேண்டும்' எனும் போது
நான்
இறைவனாய்க் களித்திருப்பேன் என் அன்பே!!!
Subscribe to:
Posts (Atom)