Saturday, January 16, 2016

நான் கடவுள்

உன்னைப் பார்க்க வேண்டும் என்று
தவிப்பாய் இருக்கிறது எனக்கு!!

உன் பேச்சில் வழியும் அன்பு
எனக்கு மட்டுமே தெரியும்..

எத்தனை விழிகளுக்கு நடுவில் இருந்தாலும்
உன் கண்களை
என்னால் கண்டு கொள்ள முடியும்..,

நீ நடந்து சென்ற பாதைகள் எல்லாம்
உன் வாசம்
முகர்ந்து அறிந்து கொள்வேன் உயிரே!


ஒரு பாதம் வைத்து ஒரு பாதம் தூக்கி
நீ நடந்து போகையில்
பூமியும் வானமும் பூரித்த கணங்களுக்கு
நானே சாட்சி!!!


உதடு குவித்து,
ஒன்றையொன்று நனைத்து,
விரியும் பூவாய் விழும் வார்த்தைகளில்
என்னோடு சேர்ந்து
எங்கோ சில நட்சத்திரங்கள்
விழுந்து எழுந்திருக்கும்...


உன் இடையில் கை வைத்து
என்னோடு அணைக்கும் பொழுதுகளில்
எல்லா உயிரும் என் உயிரே!!!


உன்னோடு மோகித்து
உயிரோடு கலந்த பின்னும்
நீ 'இன்னும் வேண்டும்' எனும் போது
நான்
இறைவனாய்க் களித்திருப்பேன் என் அன்பே!!!

No comments:

Post a Comment