முட்டாள்களின் மொழியை
இங்கு யார்
புரிந்து கொள்ள இயலும்?
மொழி போட்ட பாதை
வழியே தான்
காதல் நடந்து போக வேண்டுமென்றால்
அது முடமாகித் தான் போயிருக்கும்...
பார்ப்பதற்கு கண்ணென்றும்
முகர்வதற்கு மூக்கென்றும்
வைத்து விட்டால்
காட்சியின் வாசம் இங்கு
யார் காண இயலும்?
ஒன்றோடு ஒன்று
ஊடுருவி நின்ற நெறி தெரிந்து விட்டால்
நீயென்றும் நானென்றும் ஏது?
முட்டாள்களின் மொழியை
இங்கு யார்
புரிந்து கொள்ள இயலும்?