Monday, July 31, 2017

நீயே காதல்..

தான் யாரென்று அறியாது
காதலிக்கிறார்கள் இவர்கள்..

அது எவர் காதலென்று
அவர்களுக்கு எப்படித் தெரியும்?

இருத்தலில் இருக்கின்ற காதல்
இவர்களுக்கு எப்படி இயம்புவேன்?

உன் விரல் தீண்டும் போது
என் உயிரெல்லாம் உன்னுள் கலந்திருக்கும்..

என் காதலின் எல்லா ரகசியங்களும்
உன் மோனத்தின் ஊடே நீ பார்க்கலாம்..

உன் காதல் மட்டும்
எனக்கு போதும்..

மற்றெல்லாம் நீயே வைத்துக் கொள்...

என்னை பொறுத்த வரை
இருத்தலில் நீ மட்டுமே  அழகு..