Thursday, December 24, 2015

தூது

நீயும் நானும் சேர்ந்திருந்த இரவுகளில்
விடியல் வரை விழித்து களித்திருப்பேன் .

நீயில்லாத இரவுகளில் தூக்கமும்
தழுவாமல் தனித்திருப்பேன் ...

எல்லா நாட்களிலும் நானும்
இரவும் மட்டுமே துணை.

நீ அவ்வப்போது மட்டுமே வருகின்றாய்...

என் உயிரே!  என் அன்பே!!!
நிலவின் ஒளியாய் உனை தழுவும்
என் எல்லா கவிதைகளும்...

No comments:

Post a Comment