நீயும் நானும் சேர்ந்திருந்த இரவுகளில்
விடியல் வரை விழித்து களித்திருப்பேன் .
நீயில்லாத இரவுகளில் தூக்கமும்
தழுவாமல் தனித்திருப்பேன் ...
எல்லா நாட்களிலும் நானும்
இரவும் மட்டுமே துணை.
நீ அவ்வப்போது மட்டுமே வருகின்றாய்...
என் உயிரே! என் அன்பே!!!
நிலவின் ஒளியாய் உனை தழுவும்
என் எல்லா கவிதைகளும்...
No comments:
Post a Comment